Wednesday, April 2, 2008

செருப்பு

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------


வழியில் தனித்துக்கிடக்கும் ஒற்றைச் செருப்பு

நினைவூட்டுகிறது

ஒரு முகத்தை

யாரோ ஒருவரின் நிழலை

அவர் விட்டுச் சென்ற

பொருட்படுத்தப்படாத பிரிவை



ஆனாலும் அது வைத்திருக்கிறது இன்னும்

மனித முகத்தை நினைவூட்டும்

ஒரு ரகசியத்தை
------------------------------------------------

No comments: