எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்
------------------------------------------------------
தொலைக்காட்சியிலிருந்து வழிந்த
இரத்தம்
அறையில் நிரம்பியது கலவரத்தோடு
வெளியேறவும் முடியாமல் உள்ளடங்கவும் முடியாமல்
சுவர்களில் மோதித்திரும்பும்
அவலக்குரல்களை பின் தொடர்ந்த
இரத்தம் எங்கும் உறையவேயில்லை
தளும்பிக் கொண்டேயிருந்தது
அந்த அறைமுழுதும்
வெளியே வேலை முடித்து வந்த
அவர்கள்
வீட்டைத்திறப்பதற்கு சாவியை துவாரத்தினுள்
செலுத்தியபோது கண்டார்கள்
கதவின் இடைவெளியினூடே
இரத்தம் கசிந்த கொண்டிருப்பதை
துவாரத்தினுள் திறப்பை செலுத்தியபோது
பிறிட்டது இரத்தப் பெருக்கு
சாறு நிரம்பிய பழம் உடைந்ததாய்.
அந்த அறை வன்முறையில்
கனிந்திருந்தது
ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் வழியாக
மூலமாக
இரத்தப் பழமாகிய அறையில்
படுத்திருக்கத்தான் வேணும்
அந்த உதிர மணத்தின் மத்தியில்.
இன்று
வேறு எந்த இடத்தையும் தேர்வு செய்வதை விடவும்
இது மேல் என்பேன்
இன்னொரு அறையில்
கத்தியோடும் துப்பாக்கிகளோடும்
கதறியழும் பேதமை நிரம்பிய விழிகளோடும்
இன்னும் யாராவது எதிரில் நிற்பதை விடவும்
உதிரம் நிரம்பிய அறையினுள் இருப்பது மேலானது
இதையே நாம் இப்போது விரும்புவதாக
கடவுளுக்கும் சொல்லி விடுங்கள்
தேநீர்க்கடையிலோ
பேருந்து நிறுத்தத்திலோ
சந்தையிலோ
நீங்கள் அவரைப்பார்க்கும் போது
இதை மறந்து விடாதீர்கள்
சிலவேளை அவர்
அவசரமாகவோ பதற்றமாகவோ நிற்கக்கூடும்
அல்லது
நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கலாம்
ஆனாலும் இதை மறந்து விடாதீர்கள் தயவு செய்து
ஒரேயொரு ஆறுதல்
இப்போதைக்கு இந்தத் தொலைக்காட்சிக்குருதி
அறையில் மணக்கப்போவதில்லை
ஆனாலும் இந்த ஒத்திகையில்
முளைவிடும் இரத்த நாட்கள்
பிறகு
அறையில் நிரம்பி தெருவிலோடி
ஊர்க்க்குளங்களில் நிரம்பி
கிணறுகளில் ஊறி
உங்கள் வயிற்றிலும் வாயிலும் இரத்தமேயாகி
அதுவே மிஞ்சிய ஒரேயொரு சுவையாக மாறி
No comments:
Post a Comment