எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்
------------------------------------------------------
மலைகள் பறக்கத் தொடங்கும்போது
அவற்றின் நிழல் எப்படியிருக்கும்
பறவைகளின் பாதையில்தானா
மலைகளின் பறத்தலும்
மலைகளும் பறவைகளும்
இணைந்து பறத்தல் கூடுமோ
மலைகள் பறந்து எங்கே இறங்கும்
எவ்விதமாய்.
ஒருபோது மலைகள் பறந்து
பூமியை நீங்கினால்
பூமியின் சாயல் எவ்விதமாகும்
சிகரமும் பள்ளத்தாக்கும் உடைய மலை எப்போதும்
பூமியின் முகம் என்றார்
ஓரிரவு வழிதவறி வந்து தங்கிச் சென்ற
விருந்தாளி
முகமற்ற பூமியில்
மூலிகைச் செடியேந்திய
மலைத்தேவதை கண்ணீர் மல்க நின்றாள்
மலை விட்டுச் சென்ற நதியோடு
------------------------------------------
No comments:
Post a Comment