
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பிலிருந்து ஒரு புதிய இலக்கிய இதழ் “மகுடம்“ என்ற பெயரில் வந்துள்ளது. 2012 ஜனவரி - காலாண்டிதழ். ஆசிரியர் மைக்கில் கொலின். கொலின், முன்னர் திருகோணமலையிலிருந்து “தாகம்“ இதழை வெளியிட்டிருந்தார். பிறகு அந்த இதழை அவராற் தொடர முடியவில்லை. ஆனாலும் கொலினின் தாகம் தீரவில்லை. அந்தத் தாகமே இப்பொழுது “மகுடம்“ என்று வந்திருக்கு.
இந்த முதலாவது இதழில் க.அருள் சுப்பிரமணியம், வி.மைக்கல்கொலின், திசேரா, சிவனு மனோகரன் ஆகியோர் எழுதிய நான்கு சிறுகதைகளும் ஆனந்தா ஏ.ஜி. இராஜேந்திரம் எழுதிய ஒரு குறுநாவலும் உள்ளன. மௌனகுரு, செ.யோகராசா, பெரிய ஐங்கரன், க.கோணேஸ்வரன், சி.ரமேஸ், ச.சீவரெத்தினம் ஆகியோர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். எஸ். பொ. எனும் வல்லபம் என்ற தலைப்பில் எஸ்பொவைப் பற்றி அ.ச.பாய்வா எழுதிய கட்டுரை ஒன்றும் உள்ளது.
இதைத் தவிர, தாமரைத்தீவான், அ.ச.பாய்வா, அனார், கோ.நாதன், ஷெல்லிதாசன், பவித்திரன் ஆகியோர் எழுதிய கவிதைகளும் உள்ளன. அ.ச.பாய்வாவின் “ஆத்ம விசாரமும் அன்றாட வாழ்வும் என்ற சிறுகதைத் தொகுதிக்கான மதிப்புரையை சித்திரலேகா மௌனகுருவும் கலாநிதி சரவணபவனின் “காலனித்துவ திருகோணமலை“ என்ற வரலாற்றுப் பதிவு நூலுக்கான மதிப்புரையை யதீந்திராவும் நந்தினி சேவியரின் “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்“ சிறுகதைத் தொகுதிக்கான மதிப்புரையை முகைதீன் சாலியும் எழுதியிருக்கிறார்கள்.
எண்பது பக்கங்களுடைய இந்த இதழின் விலை 100.00. (நூறு மட்டுமே).
தொடர்புக்கான முகவரி-
ஆசிரியர், மகுடம், இலக்கம் 90, பார் வீதி, மட்டக்களப்பு (Editor, Magudam,90, Bar Road, Batticaloa, Sri lanka)
தொலைபேசி எண் - 0774338878
Email - w.michaelcollin@yahoo.com
w.michaelcollin@gmail.com
1 comment:
நல்ல முயற்சி :-)
Post a Comment