Monday, November 14, 2011

ஒரு கவனக்குறிப்பு

புல்வெளி - என்ற என்னுடைய இந்தத் தளம் 2009 மே 23 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதுவரையிலும் வேறொரு நண்பரே பதிவுகளைச் செய்திருந்தார். தொடர்ந்த பதிவுகளைச் செய்ய வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் பதிவேற்றங்களை நிறுத்தியிருந்தார்.


முன்னர் கூட நான் எழுதிய விசயங்கள் அத்தனையும் பதிவேற்றப்படவில்லை. இந்தத் தளத்தை ஒரு மாதிரித் தளமாகவே ஆரம்பித்திருந்தேன். முறைப்படுத்தவோ, முழுமைப்படுத்தவோ முடியவில்லை. தொடர்ந்து இதை நெறிப்படுத்தவும் பதிவேற்றவும் வாய்க்கவும் இல்லை. தவிர, இதைப் பார்க்கக்கூட வசதிப்படவில்லை. மேலும் பல முக்கியமான விசயங்களை எழுதவேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆனால், அவற்றை அப்போது பதிவேற்றம் செய்வது உகந்ததல்ல என நண்பர்கள் சொன்னார்கள்.

இந்த நிலையில் தொடர்ந்தும் இதை இயக்குவதில் சிரமங்களே உருவாகும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே பதிவேற்றும் நண்பரிடம் இதை நிறுத்தி வைக்கும்படி கேட்டேன். அவர் நிறுத்தினார்.

ஆகவே, அதுவரை பதிவேற்றங்களைச் செய்த அந்த நண்பருக்கு என்னுடைய நன்றிகள். அவருடைய சம்மதத்தைப் பெறமுடிந்தால் அவருடைய பெயரை நன்றியுடன் இங்கே வெளிப்படுத்த முடியும்.

எனினும் அதுவரையிலும் பதிவேற்றம் செய்த அவருக்கு நன்றிகள்.

தொடர்ந்து இந்த்த்தளத்தை செயற்படுத்தலாமா என்று பார்த்தபோது இதற்கான கடவு எண் மறந்து விட்டது. குறிப்பாக எனக்கும் அந்த நண்பருக்கும்.

பிறகு, நீண்ட பல முயற்சிகளுக்குப் பிறகு கடந்த வாரம் தற்செயலாக நினைவுப் பொறியில் அது தட்டுப்பட்டது.

விளைவு - மீண்டும், புல்வெளி.

ஆனால், பரீட்சார்த்தமாக.

வாசிப்பாளர்கள் ஊக்கப்படுத்தினால் தொடரலாம்...

நன்றி.

பின்னர்,

2 comments:

rashmy said...

வாழ்த்துக்கள் கருணாகரன்...
பனி தொடரட்டும்..

றஷ்மி

deep said...

தொடருங்கள் கருணாகரன்!
- பிரதீபா