------------------------
எழுதியவர்- கருணாகரன்
-----------------------------------------------
இன்றும் நான் பேச நினைத்தேன்
வார்த்தைகள் சலிப்பூட்டின
ஒளி அதிக சங்கடத்தைத் தந்தபோது
வெளியே
சுவரினோரம்
நிழலும் இருளும் கலந்திருந்த
மறைவில் ஒதுங்கினேன்
உள்ளே
இசையின் உக்கிரமும்
நடனத்தின் ஆவேசமும்
சுவர்களிலும் நிழல்களிலும் பிரதிபலித்தன
யாரும்
என்னைக் கவனிக்கவில்லை
------------------------------------------------------
No comments:
Post a Comment